Wednesday, December 25, 2019

நன்றி 2019✨

2018 இரத்தக் கறையுடன் தொடங்கியது (கல் தட்டி காலில் அடி).....அதனால் சற்று பயத்துடன் மிக கவனமாக  2019 ம் ஆண்டை வரவேற்றேன் (வழக்கம் போல் பிள்ளையார் கோவிலில்).
என்னுடைய வேண்டுதல் என்னவாக இருந்திருக்கும் என்று இப்போது அசைப் போட்டுப் பார்க்கிறேன்.
அப்பாவின் கை  சரியாக வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருந்திருக்கக்கூடும்.
பின்பு என்னுடைய முதுகலை கனவாக இருந்திருக்கலாம்...சரியாக நினைவு இல்லை.

என்னுடைய 2019 ம் ஆண்டை மே மாதத்திற்கு முன் ,மே மாதத்திற்கு பின் என பிரிக்கலாம்..
அதிகமான மன உளைச்சலுக்கு உண்டான ஆண்டு என்னைப் பொறுத்தவரையில் இதுவே.

எங்கு இருந்து எல்லையற்ற மகிழ்ச்சியை பெற்றேனோ அங்கு இருந்து மனக்கசப்பையும் பெற்றேன்.

சற்று திரும்பிப் பார்க்கிறேன்...



எதற்காக அன்று இந்த புகைப்படம் எடுத்தேன் என்று தெரியவில்லை.
 கண்ணீர் பொங்கிய கண்களுடன் எடுத்த புகைப்படம்.

(இடம்: வேளச்சேரி)

29/06/2019
7:25 pm

அத்தனை அழுகை;
என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாள்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.
---எதுவும் நிரந்தரம் இல்லை---
சிலர் என்மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள் என்பதை மிக அழகாக இவ்வாண்டு புரியவைத்தது.
நான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நல்ல சில தருணங்களை எனக்கு அளித்தது.

நான் துவண்டு போகிறபோதெல்லாம் எனக்கு ஊக்கமளித்தவர்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கிளியோபாட்ரா உனக்கு  நான் எவ்வாறு நன்றி சொல்வேன் !?
என்னைப் பலர் Positive energyக்காரி என்பார்கள்.
நான் யார் என்பது கிளியோபாட்ரா விற்கு
மட்டுமே வெளிச்சம்.
நிறைய அன்புகள் கிளியோபாட்ரா!

தம்பி பீட்டர் பற்றி எழுதாமல் 2019ஆம் ஆண்டை என்னால் நிறைவு செய்ய முடியாது.
தம்பி பீட்டர் உனக்கு ஒரு நல்ல அக்காவாக இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
உனக்கு வழங்கிய  அறிவுரைகள் அனைத்தும் எனது
அனுபவங்கள்.
நன்றி தம்பி பீட்டர் .

இவ்வருடம் என்னை துரத்திய பல கேள்விகளுள் முதன்மையானது "என்னிடம் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள்? " , "என்னை ஏன் அப்படி நடத்தினார்கள்" என்பதுதான்.

கிளியோபாட்ரா எனக்கு வழங்கிய அறிவுரை தற்போது நினைவுக்கு வருகிறது...
"எதிர்பார்ப்பைக் குறை"
"ரொம்பவும் வெளிப்படையாக இருக்காதே"

அறிவுரைகள் ஏற்கபடுகிறது கிளியோபாட்ரா.

பலரை சிரிக்க வைத்த நான்  ,
சிலர் அழ காரணமாகவும் இருந்திருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன்.
மன்னித்துவிடுங்கள்.

நான் உண்மையாக இருந்தவர்கள் என்னிடம் உண்மையாக இருந்தார்களா என்றால்.....
'உன்னை யார் எதிர்பார்க்கச் சொன்னது ?'
என்று என் உள்ளுணர்வு பதில் அளிக்கிறது.
அதுவும் சரிதானே.!

நான் சற்றும் எதிர்பார்க்காதவர்களெல்லாம் பல சமயங்களில் எனக்கு உதவினார்கள்.
அவர்களை இப்போது நன்றியுணர்வுடன் நினைவுகூறுகிறேன்.

2019 ஆம் ஆண்டு எனக்கு பல நல்ல படிப்பினைகளை தந்தது.
உங்களுக்கும் தந்திருக்கக்கூடும்.
அவற்றையெல்லாம் சற்று பொறுமையாக உட்கார்ந்து நினைவுப்படுத்திப் பாருங்கள்.

அவை உங்களை முன்னோக்கி தொடர்ந்து பயணிக்கத் தூண்டும்.

நன்றி 2019

:)



இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...