Friday, March 6, 2020

No!!!!
.
.
.
அன்று சுதா மே(மா)ம் வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் "Can i barrow ஐஸ்வர்யா என்று Permission கேட்டபடி , மனதில்  கேள்வியுடன்  வந்த ஆஷிக் சாருக்கு நான் அளித்த பதில்.

அவர் கேட்டது (சொன்னது) 'ஐஸ்வர்யா நீ இந்த வாட்டி Imperium Convenor maa'

No!!!!
இப்படியாக தொடங்கியது இந்த பயணம்...Imperium பயணம்!

ஜனவரி 8 தொடங்கிய இந்த பயணம்  இன்று (மார்ச் 6) முடிவடைந்தது.

'நோ' என்று சொல்லித் தொடங்கிய பயணம் எனக்கு நல்ல பல அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது.

ஆஷிக் சாரிடம் பல போலி காரணங்களையும் சில உண்மை நிலவரங்களையும் கூறி நழுவ நினைத்த போது, அவர் சொன்னது ஒன்று தான் ....
.
.
.
"நாலு வருசமா இங்க இருக்க மா, நீ ஏன் பண்ணமாட்டேனு சொல்ற" என்றார்.

அவரது கேள்வி நியாமானது தான்..
சரி என்று சொல்லிவிட்டேன், எனினும் பயமும் தயக்கமும் என்னை துரத்திக்கொண்டே இருந்தது.
அருகில் இருந்த அறையில் அன்றே சார் தேர்ந்தெடுத்திருந்த  குழுவினருடன் ஒரு சிறிய மீட்டிங் ...

எனக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதவர்கள். பயம் அதிகரித்தது.
.
.
.
.
என்னுடைய தயக்கத்தை அனைவரிடத்திலும் சார் கூற, நான் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்து சமாளித்தேன்..

மந்தமாக தான் எங்கள் பணியைத் தொடங்கினோம்.
என்னுடைய நண்பர்கள் சிலரிடம் என்னுடைய பயத்தைக் கூறிய போது, அவர்கள் பெரும்பாலும் சொன்னது "உன்னால் முடியும்..அதே நேரத்தில் உன் உடல்நிலையைக் கருத்தில் கொள்" என்பதுதான்.

இடையில் தவறான முடிவை எடுத்து விட்டோம் என நினைக்காமல் இல்லை...
எனினும் எதோ ஒன்று 'சரி, செய்துதான் பார்ப்போம் ' என்ற மனநிலை.
முழு மனதாக கவனம் செலுத்தினேன்...
எனக்காகவே உருவாக்கியது போல் ஒரு டீம்...
நகைச்சுவை க்கு பஞ்சமேயில்லை.
ஷூக்கத்' இருக்கும்வரை எந்த பயமும் இல்லை என்று அப்போதே என் மனம் சொல்லியது.
சற்று சீரியஸாக 'குட்டி' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணப்பட்டாலும் எனக்கும் ஷூக்கத் கும் நன்றாக பொருந்திப்போனாள்..
டோரா' வின் உதவி இன்றியமையாதது.
மேலும் பலர் உதவியுடன் இன்று (மார்ச் 6) நன்றாக நடந்து முடிந்தது எங்களது இம்பிரியம்.

பல சமயத்தில் எங்களது பணியில் தொய்வு ஏற்பட்டது, கடைசிநிமிடத்திலும் கூட.... எப்படியோ சமாளித்துவிட்டோம்.!

சில நல்ல மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டேன்..மகிழ்ச்சி!

என்னுடைய அப்பா எனக்கு தந்த ஒரேயொரு அறிவுரை 'நல்ல பெயர் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்ட பெயர் வாங்கி விடாதே ' என்பதுதான்..
என் அப்பாவைக் காட்டிலும் என் கோபத்தை நன்கறிந்தவர் எவருமிலர்...
என்னை நானே பிறரை அனுசரித்து போகும் பழக்கமற்றவள் என்று இவ்வளவு நாள் எண்ணிக்கொண்டிருந்தேன்...'அப்படியில்லை நீ ' என்ற உணர்வு என்மீது எனக்கு தோன்றிவிடட்து/ ஏற்பட்டுவிட்டது.

யார் மனதையும் புண்படுத்தவில்லை என நம்புகிறேன்.

எப்படியோ இப்பயணம் எனக்கு ஒரு நல்ல அனுபவம்.

I hope i did justice to my Award.
:)

2 comments:

  1. படித்ததில் பிடித்தது ❤️.
    வெற்றியை தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்!:)

    ReplyDelete

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...