Friday, April 17, 2020

காலத்தின் வசமுள்ளது,
சில புரிதல்கள்;

Wednesday, April 15, 2020

அந்த சின்ன பெஞ்ச் அறிந்திருக்கக்கூடும்.
பகிரவில்லை,
இனி பலனில்லை!

.


Saturday, March 21, 2020

நான் பேப்பரில் எழுதி எழுதி அடித்த கவிதையெல்லாம் அவளுக்கானது !

Friday, March 6, 2020

No!!!!
.
.
.
அன்று சுதா மே(மா)ம் வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் "Can i barrow ஐஸ்வர்யா என்று Permission கேட்டபடி , மனதில்  கேள்வியுடன்  வந்த ஆஷிக் சாருக்கு நான் அளித்த பதில்.

அவர் கேட்டது (சொன்னது) 'ஐஸ்வர்யா நீ இந்த வாட்டி Imperium Convenor maa'

No!!!!
இப்படியாக தொடங்கியது இந்த பயணம்...Imperium பயணம்!

ஜனவரி 8 தொடங்கிய இந்த பயணம்  இன்று (மார்ச் 6) முடிவடைந்தது.

'நோ' என்று சொல்லித் தொடங்கிய பயணம் எனக்கு நல்ல பல அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது.

ஆஷிக் சாரிடம் பல போலி காரணங்களையும் சில உண்மை நிலவரங்களையும் கூறி நழுவ நினைத்த போது, அவர் சொன்னது ஒன்று தான் ....
.
.
.
"நாலு வருசமா இங்க இருக்க மா, நீ ஏன் பண்ணமாட்டேனு சொல்ற" என்றார்.

அவரது கேள்வி நியாமானது தான்..
சரி என்று சொல்லிவிட்டேன், எனினும் பயமும் தயக்கமும் என்னை துரத்திக்கொண்டே இருந்தது.
அருகில் இருந்த அறையில் அன்றே சார் தேர்ந்தெடுத்திருந்த  குழுவினருடன் ஒரு சிறிய மீட்டிங் ...

எனக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதவர்கள். பயம் அதிகரித்தது.
.
.
.
.
என்னுடைய தயக்கத்தை அனைவரிடத்திலும் சார் கூற, நான் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்து சமாளித்தேன்..

மந்தமாக தான் எங்கள் பணியைத் தொடங்கினோம்.
என்னுடைய நண்பர்கள் சிலரிடம் என்னுடைய பயத்தைக் கூறிய போது, அவர்கள் பெரும்பாலும் சொன்னது "உன்னால் முடியும்..அதே நேரத்தில் உன் உடல்நிலையைக் கருத்தில் கொள்" என்பதுதான்.

இடையில் தவறான முடிவை எடுத்து விட்டோம் என நினைக்காமல் இல்லை...
எனினும் எதோ ஒன்று 'சரி, செய்துதான் பார்ப்போம் ' என்ற மனநிலை.
முழு மனதாக கவனம் செலுத்தினேன்...
எனக்காகவே உருவாக்கியது போல் ஒரு டீம்...
நகைச்சுவை க்கு பஞ்சமேயில்லை.
ஷூக்கத்' இருக்கும்வரை எந்த பயமும் இல்லை என்று அப்போதே என் மனம் சொல்லியது.
சற்று சீரியஸாக 'குட்டி' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணப்பட்டாலும் எனக்கும் ஷூக்கத் கும் நன்றாக பொருந்திப்போனாள்..
டோரா' வின் உதவி இன்றியமையாதது.
மேலும் பலர் உதவியுடன் இன்று (மார்ச் 6) நன்றாக நடந்து முடிந்தது எங்களது இம்பிரியம்.

பல சமயத்தில் எங்களது பணியில் தொய்வு ஏற்பட்டது, கடைசிநிமிடத்திலும் கூட.... எப்படியோ சமாளித்துவிட்டோம்.!

சில நல்ல மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டேன்..மகிழ்ச்சி!

என்னுடைய அப்பா எனக்கு தந்த ஒரேயொரு அறிவுரை 'நல்ல பெயர் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்ட பெயர் வாங்கி விடாதே ' என்பதுதான்..
என் அப்பாவைக் காட்டிலும் என் கோபத்தை நன்கறிந்தவர் எவருமிலர்...
என்னை நானே பிறரை அனுசரித்து போகும் பழக்கமற்றவள் என்று இவ்வளவு நாள் எண்ணிக்கொண்டிருந்தேன்...'அப்படியில்லை நீ ' என்ற உணர்வு என்மீது எனக்கு தோன்றிவிடட்து/ ஏற்பட்டுவிட்டது.

யார் மனதையும் புண்படுத்தவில்லை என நம்புகிறேன்.

எப்படியோ இப்பயணம் எனக்கு ஒரு நல்ல அனுபவம்.

I hope i did justice to my Award.
:)

Monday, January 27, 2020

அந்த டேபிள்...!

சிரிப்புச் சத்தம்.
ஆம் அந்த டேபிள் அதிகம் கண்டது எங்களுடைய சிரிப்புச் சத்தத்தைதான்...
எங்களுடைய கூட்டம் சற்று பெரியது தான் என்றாலும், அந்த டேபிள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அந்த டேபிளுக்கும் எங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன்...நாங்கள் அந்த டேபிளில் உணவை மட்டும் பரிமாறவில்லை எங்களுடைய பல இன்ப துன்பங்களை பரிமாறியிருக்கிறோம்..அந்த டேபிள் பல குறும்புகளைக் கண்டுள்ளது. ஜெயந்தியின் முட்டை பல முறை ஒழித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த அடர் நிற டேபிளில் ரம்யாவின் மஞ்சள் தட்டு அத்தனை பளீரென்று இருக்கும்.
ஈவ்லினின் தக்காளி தொக்குக்கென்று ஒரு கூட்டம் கூடும். சரண்யாவின் பொடி அவ்வளவு வேகமாக காலியாகும். "எங்கிட்ட வம்பு பண்ணாம உன்னால இருக்க முடியாதுல" என்றபடி ஈவ்லின்,
"கேளேன்...இங்க கேளு" என்றவாறு பேசிக்கொண்டே இருக்கும் ஷேரன், எதையாவது சிந்தித்தப்படியே இருக்கும் பூர்ணி, கலகல என அரட்டை அடித்தபடியே ஜென்னி, பெட்ஸி, ஜேஷிபா, 'அந்த' இடத்தில் நான் தான் உட்காருவேன் என முரண்டுபிடித்தபடியே நான்;
குட்டித்தட்டில் சாய்மா உண்ணும் சோற்றை எண்ணி விடலாம், நாங்கள் எல்லாரும் வந்து அமர்ந்த பின் மிக மெதுவாக வரும் ஷமிதா
மற்றும் தோசை தின்று பட்டம் வென்ற தோசை மபிஷா, இதையெல்லாம் அமைதியாக கவனித்தபடியே சாப்பிடும் என் பிரியா ;
ஆகா!!! எத்தனை நல்ல நினைவுகள் ...
பல சோகமான நிகழ்வுகளும் அங்கு பகிரப்பட்டுள்ளது.
முதல் காதல் தொடங்கி பல அழகான நினைவுகளை நாங்கள் பகிர்ந்து கொண்ட இடம் "அந்த டேபிள்".
இன்றும் அந்த டேபிள் அப்படியே தான் இருக்கிறது..ஆனால் நான் மேலே குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர வேறு யாரும் இப்போது இல்லை. வெவ்வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த பசுமையான நிகழ்வுகளை மீட்டெடுக்கவே அதே டேபிளில் இப்போதும் அமர்வதுண்டு.

வருங்காலத்தில் அந்த இடம், அந்த டேபிள் எத்தகைய மாற்றம் பெறப்போகிறது  என தெரியவில்லை.
அப்படியே இருக்கும் பட்சத்தில் எங்களில் யார் அதனை கண்டாலும் ஒரு நிமிடமேனும் அங்கு நின்று சிரித்து விட்டுதான் செல்வோம் என்பது மட்டும் நிதர்சனம்.



இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...