Friday, December 6, 2024

அறிந்து தெளிதல்

யாருமற்ற அறையில், நான் சுவாசிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும் அமைதியில், யோசித்து பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருந்தது.

வருவார்கள் 
போவார்கள் 
உனக்கு நிரந்தரம் நீ
உனக்கான உலகில் பிறர் உள்நுழைய தான் நீ அனுமதி தரவேண்டுமே அன்று
வெளியேற அல்ல
வருவார்கள் 
போவார்கள்


Acceptance is peace 🕊️ 

Wednesday, September 11, 2024

நீண்ட இரவு

நம்ம நினைச்ச விஷயம் நடக்கும் போது ஒரு விதமான எண்ணங்கள் தோன்றி நம்மல தூங்க விடாம பண்ணுது.. அப்படியான ஒரு நாள் தான் இன்னைக்கு..!


Sunday, August 4, 2024

Hoping

 Srilanka விற்கு போக வேண்டும் என்று அடிக்கடி நான் பலரிடம் சொல்வதுண்டு. அப்படியான ஒரு உரையாடல் இன்று என் அப்பாவோடு... அப்பா ஶ்ரீலங்கா குறித்து தான் அறிந்ததை என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் அதை கேட்டவாறே YouTube யில் ஶ்ரீலங்கா குறித்த வீடியோக்கள் பார்த்துகொண்டிருந்தேன். 
அப்பா உடனே, "நீ போகும்போது என்னையும் கூட்டிட்டு போ" என்றார்.

எங்க அப்பா என்கிட்ட இப்படி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனு சொல்லி கேக்குறது இதுவே முதல்முறை.

ஶ்ரீலங்கா, I'm waiting for you!

🧿

Hope is a good thing :))




Sunday, July 14, 2024

🧿

Manifesting a love, who can sing this to me 

"உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் ..."

Tuesday, December 5, 2023

கடந்த காலம்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி திரும்பி பார்க்கையில், நான் ஆசையாக வளர்த்த பூ ஒன்று என் தோட்டத்தில் தற்போது இல்லை என்பதை உணர்கிறேன். ஆனால், அது குறித்து தற்போது என்னிடத்தில்  எந்த வருத்தமோ கவலையோ இல்லை.
இது எப்படி சாத்தியமானது?
நான் அந்தச் செடியை அத்தனை ஆசையாக வளர்த்தேன். ஒரு நாள் விடாமல் மகிழ்ச்சியுடன் தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். பெரும்பாலான நேரம் அதை ரசித்துக்கொண்டே இருந்தேன். 
பலர் என்னிடம் கேட்டார்கள், "ஏன் இப்படி தீவிரமாக அந்த பூவையே ரசித்துக் கொண்டு இருக்கிறாய், உனக்கு வேறு வேலையே இல்லையா?" என்று.
வேலை எல்லாம் இருந்தது, ஆனால் இதில் கிடைத்த மகிழ்ச்சி, எனக்கு அப்போது வேறெதிலும் கிடைக்கவில்லை...

ம்ம்ம்ம்ம்.....நன்றாக இருந்தது.
தற்போது இல்லை! 

நானாக வளர்த்தேன். மகிழ்ச்சியுடன் வளர்த்தேன். ரசித்தேன். 

இன்று இல்லை.

மனதிலும் எதுவும் இல்லை. எப்போதாவது நினைவு வந்தால், எனக்குள்ளேயே எண்ணி பார்த்துக்கொள்வேன். அவ்வளவே.

மறந்து(?!) கடந்து போவதில் ஒரு துணிச்சலும் தெளிவும் இருக்கத்தான் செய்கிறது. 

#🥀



இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...